Saturday, February 13, 2010

காதலர் தின வாழ்த்துக்கள் . . .


காதலை
காதலாய்
காதலிக்கும்
காதலர்களுக்கு - இனிய
காதலர் தின நல்வாழ்த்துக்கள்

- இன்பா (எ). ச.சிவானந்தம்

இன்பா கவிதைகள் . . .

தேவதை



எல்லோரும் சொல்கிறார்கள்

நீ

தேவதையென்று.


எனக்கு

உடன்பாடில்லை!


வேண்டுமானால்

எப்போதாவது

தேவைதையப் பார்த்தால்

நீ!

என்கிறேன் நான்!


--------------------------------------------------------


இதயங்கள் ஏனடி?


விரலுக்குத் தானடி

பூட்டினாய்

மோதிரத்தை!


இதயங்கள்

ஏனடி

இறுகிக் கொண்டன?



--------------------------------------------------------


கண்களைத் திற!



கண்களைத் திற!

தீரட்டும்

கவிதைப் பஞ்சம்.


--------------------------------------------------------


காதலுக்காய் . . .


சரிவிடு!

உனக்கும் வேண்டாம்

எனக்கும் வேண்டாம்

காதலுக்காய் காதலிக்கலாம் வா . . .


--------------------------------------------------------


அடம்பிடிக்கும் இதயம்!



அதை வாங்கித் தா

இதை வாங்கித் தா

என்று அடம்பிடிக்கும்

திருவிழா குழந்தையைப் போல்

உன்னைக் கை காட்டி

வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கிறது

என் காதல்!


--------------------------------------------------------


வி(சி)த்திரம்!


தீர்ப்பு எழுதி விட்டு

விசாரணை நடத்துவதைப் போல்

காதலை வீசி விட்டு

காரணம் கேட்கிறது

உன் கண்கள்.


--------------------------------------------------------

வேண்டும்!



உனக்கு

நான் வேண்டும்.

எனக்கு

நீ வேண்டும்

காதலுக்கு

நாம் வேண்டும்!


--------------------------------------------------------


இலவசம்!



உன்னிடம் நான் பெற்ற

முத்தத்திற்கு

இலவசமா

இந்த புன்னகை?


--------------------------------------------------------


கள்வனின் காதலி!



கள்வனாய் இருந்து

கவிஞனானவன் வால்மீகி.

கவிஞனாய் இருந்து

உன்னைத் திருடி

கள்வனாய் ஆனவன் நான்.


--------------------------------------------------------


ஈரமான இதயம்!



மழை தூவிய நேரம்

மொட்டை மாடிக்கு ஓடிவந்தாய்

கொடியில் காய்ந்திருந்த துணிகளை

அவசர அவசரமாய் எடுத்தாய்.


காய்ந்த துணிகளை சரி!

என் ஈரமான இதயத்தையும்

ஏனடி வாரி சுருட்டிக் கொண்டு போகிறாய்?



--------------------------------------------------------


வளையல்!



கையைப் பிடித்து இழுக்கையில்

உடைந்து போன

வளையல் துண்டுகளைப் பார்த்து

"இதோடு சேர்த்து நீ உடைத்த

வளையல்களின் எண்ணிக்கை

நூறு என்றாய்"



உன் புன்னகையில்

நான் உடைந்து போன

எண்ணிக்கையை விடவா

இது அதிகம் ?



--------------------------------------------------------


ஓவியா . . .



ஓவியக் கண்காட்சியில்

ஒவ்வொரு ஓவியமாய் கைகாட்டி

"இதற்கு என்ன அர்த்தம்?"

என்று கேட்டுக்கொண்டிருந்தாய்.

ஓவியங்களின்அர்த்தம்

புரிந்துகொள்ளும் திறன்

எனக்கிருந்தால் தான்

உன்னை எப்போதோ

புரிந்து கொண்டிருப்பேனடி!



--------------------------------------------------------


மௌனம். . .



புரிந்தும் புரியாமல் இருப்பது

உன் மெளனம்!

அது தான் என்னை

இருந்தும் இல்லாமல்

செய்து விடுகிறது . . .



--------------------------------------------------------


சந்திப்புகளில். . .



உனக்கும் எனக்குமான

சந்திப்புகளில்

நம்மைவிட மெளனமே

அதிக நேரம் பேசிக்கொள்கிறது . . .



--------------------------------------------------------


சொல்லாதே யாரும் கேட்டால் . . .


"ரகசியம்"
என்றவுடன்
காதுகளை நீட்டுகிறாயே
பைத்தியக்காரி!
இந்த ரகசியம்
காதுகளுக்கு அல்ல!
உன் இதழ்களுக்கு. . .



--------------------------------------------------------


அடிமையின் சுகம் . . .




சிறைவாசத்தை விட
கொடுமையானது.
அடிமைத்தனத்தை விட
அபாயகரமானது.
உன்னிடமிருந்து
நான் பெறும் விடுதலை!


--------------------------------------------------------


கிளிஜோசியம்!



என்
உள்ளங்கை ரேகைப் பார்த்து
எதிர்காலம் சொன்னாய்.
அப்போது தான் நம்பினேன்.
கிளி ஜோசியம் சொல்லும் என்று . . .


--------------------------------------------------------


கருப்பன் என் காதலன்!



என் நிறத்தைப் பற்றி
உன் தோழிகள்
கிசுகிசுத்துக் கொண்டிருந்த நேரம் . . .

"போங்கடி உங்களுக்கு இதே வேலை தான்" என்று
ஓடி வந்து
"கருப்பன் என் காதலன்" என்று
கன்னத்தைக் கிள்ளினாய்
நெஞ்சில் காயமானது!


--------------------------------------------------------


உயிர் தருவாயா?!



மரித்த மலராய்
நான்
பறித்து உயிர் தருவாயா?



--------------------------------------------------------


கவிஞனான காரணம்!



வண்ண வண்ண
ஆடைகளில் வந்து
என்னை வட்டமிடும் அழகைவிட
கனவுப்பொழுதுகளில்
கறுப்பு வெள்ளை
தேவதையாய் வவந்து
கவிதையாய் சிரிக்கும்
அந்த அழகுதானடி
என்னை கவிஞனாக்குகிறது . . .


--------------------------------------------------------


துடிதுடிக்க!



துடிதுடிக்க
தூண்டிலில் இழுத்து
திரும்பவும்
குளத்திலேயே
வீசி எறிந்து
விளையாடுகிறது
இந்த காதல் . . .

--------------------------------------------------------

- இன்பா () .சிவானந்தம்

Monday, March 31, 2008

ஈரமான இதயம் . . .


மழை தூவிய நேரம்

மொட்டை மாடிக்கு ஓடிவந்தாய்

கொடியில் காய்ந்திருந்த துணிகளை

அவசர அவசரமாய் எடுத்தாய்.


காய்ந்த துணிகளை சரி!

என் ஈரமான இதயத்தையும்

ஏனடி வாரி சுருட்டிக் கொண்டு போகிறாய்?

Tuesday, March 11, 2008

சந்திப்புகளில் . . .


உனக்கும் எனக்குமான

சந்திப்புகளில்

நம்மைவிட மெளனமே

அதிக நேரம் பேசிக்கொள்கிறது . . .

Friday, November 16, 2007

துடிதுடிக்க


துடிதுடிக்க
தூண்டிலில் இழுத்து
திரும்பவும்
குளத்திலேயே
வீசி எறிந்து
விளையாடுகிறது
இந்த காதல் . . .